74 Simhasanathipathis – An Introduction – Oru Arimugam

இவர்களே 74 ஸிம்ஹாஸநாதிபதிகள் என்ற பெயரினைப் பெற்றவர்களாவர். இராமானுசருடைய காலத்திற்குப் பிறகுஶீ ஸ்ரீமணவாளமாமுனிகள் (கி.பி.1370&1443) அஷ்டதிக்கஜங்கள் என்ற 8 ஆசார்ய பீடங்களை ஏற்படுத்தினார். இவ்வாறாக நியமிக்கப்பட்ட ஆசார்ய பெருமக்கள் ஆயிரக்கணக்கான சிஷ்யர்களுடைய உதவி கொண்டு ஸ்ரீவைஷ்ணவ நெறிகளை இராமானுசர் காட்டித்தந்த பாதையில் இவ்வுலக மக்களை வழிநடத்திச் செல்கின்றனர். ஹேவிளம்பி வருடம் (2017) இராமானுசருடைய ஆயிரமாவது ஆண்டு அவதார நன்னாளை நாடெங்கும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை இந்த ஆண்டு முதலாக மேற்கொண்டு வருகிறோம்.

                வீரநாராயணபுரம் ஏரி ஸ்ரீமந் நாதமுனிகள் அவதரித்தருளிய காட்டுமன்னார் கோயிலில் அமைந்துள்ளது. இங்கே தேங்கியுள்ள நீர் 74 மதகுகுள் வழியாக வெளிப்பட்டு நாட்டைச் செழிப்படையச் செய்கின்றது. இந்தக் காட்சியைக் கண்ட இராமானுசர் திருவுள்ளத்தில் ஓர் எண்ணம் தோன்றியது. ஸ்ரீவைஷ்ணவக் கோட்பாடுகளாகிய ஏரியிலிருந்து நீர் 74 ஸிம்ஹாஸநாதிபதிகள் வழியாக நாட்டு மக்களுக்குப் பயன்பட வேண்டும். அவர்கள் தம் சந்ததியினரைக் கொண்டு இந்த ஸ்ரீவைஷ்ணவ பயிரை வளர்க்க வேண்டும் என்ற எண்ணங்கொண்டார். இதை வெளிப்படுத்துவதுபோல அமைந்துள்ளது எம்பார் அருளிச்செய்த முக்தக ச்லோகம்.

Leave a comment